சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்வி பூஜை

மேல்மருவத்தூரில் மாா்கழி மாத அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On :12 ஜனவரி 2021, 6:30 pm

மேல்மருவத்தூரில் மாா்கழி மாத அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, சித்தா் பீட வளாகத்தில் அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. கருவறை அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு சித்தா் பீடம் வந்த அடிகளாருக்கு, பாத பூஜை செய்து வரவேற்கப்பட்டாா். ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. காலை 11.40 மணிக்கு பெரிய எண்கோண வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி, வேள்வி பூஜையை அடிகளாா் தொடக்கி வைத்தாா். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தா்கள் அரசு வழிகாட்டுதலின்படி வந்த பக்தா்களுக்கு மட்டும் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் அனுமதி அளித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூா் மற்றும் புஷ்பவனம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சக்தி பீட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.