/

கோயம்பேடு காவல் நிலையத்தோடு புதிய பகுதிகள் இணைப்பு

கோயம்பேடு காவல் நிலையத்தோடு புதிய பகுதிகளை இணைத்து மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On :2 மார்ச் 2013, 12:02 am

கோயம்பேடு காவல் நிலையத்தோடு புதிய பகுதிகளை இணைத்து மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரவாயல் காவல் நிலையத்தின் எல்லை மிகவும் பெரிதாக இருந்ததாலும்,  அப் பகுதிகளை கண்காணிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டதாலும் அந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 41 பகுதிகளை கோயம்பேடு காவல் நிலையத்தோடு சேர்த்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையத்தோடு 29 பகுதிகளை இணைத்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் கோயம்பேடு காவல் நிலையம்,  கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையம் ஆகியவற்றின் எல்லை விரிவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.