சென்னையில் போலீஸ்காரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் பிலிப் (33). இவர் திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் காலை 8 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். பின்னர் பகல் 12 மணியளவில் அவரது மனைவி ஜெயந்திக்கு (28) போன் செய்த பிலிப், தான் வீட்டுக்கு வரமாட்டேன் என்றும் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என்றும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து செல்போனை அணைத்து விட்டாராம்.
பின்னர் பிற்பகல் 2 மணியளவில் மெரினா கடற்கரையில் கடலை நோக்கி சென்ற அவர், நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரித்ததில், கணவன் மனைவிக்கு இடையில் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை என்றும், காலையில் கிளம்பும் போது சிறிய தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
பிலிபின் உடலை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிலிப்-ஜெயந்திக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

