நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அடகு கடை மோசடி: உரிமையாளர் கைது

சென்னை அய்யப்பன்தாங்கலில் அடகு கடை மூலம் பொதுமக்களின் நகையை மோசடி செய்த உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 4:12 am IST

சென்னை அய்யப்பன்தாங்கலில் அடகு கடை மூலம் பொதுமக்களின் நகையை மோசடி செய்த உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அய்யப்பன்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பத்மநாபன் மனைவி திலகவதி (55). இவர் அய்யப்பன்தாங்கல் டிரங்க் சாலையில் கடை வைத்திருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போரோராம் என்பவரிடம் 96 கிராம் தங்க நகையை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் கடன்

வாங்கினாராம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்னர், கடன் வாங்கிய பணத்தை செலுத்தி அடகு வைத்த நகையைத் திருப்பி வாங்குவதற்காக திலகவதி, போரோராமின் கடைக்குச் சென்றார். அப்போது கடை பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதேபோல போரோராமிடம் நகையை அடகு வைத்தவர்கள், கடை பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையின் குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போரோராமை தேடி வந்தனர்.

இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த போரோராமை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது திருட்டு, மோசடி வழக்குகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.