நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நிதி நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? நிதித்துறை விளக்கம்!

தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? நலத்திட்டங்கள் நிறுத்தப்படுமா? என்ற கேள்விக்கு நிதித்துறை செயலர் பதில்.

News image

நிதியமைச்சர் மரிய வில்சன் உடன் நிதித் துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் - DIPR

Updated On :16 ஜூன் 2026, 6:52 pm IST

தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? என்ற கேள்விக்கு நிதித் துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார். வெள்ளை அறிக்கை வெளியிட்டு அது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

பின்னர் நிதியமைச்சர் மரிய வில்சன், நிதித் துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கடன் சுமை அதிகரிக்க நலத்திட்டங்கள் காரணமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சித்திக் ஐஏஎஸ்,

''தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவாகிறது. நல்ல திட்டங்கள் நிச்சயம் நிறுத்தப்படாது.

தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நிதியை உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

யாரையும் குறை சொல்ல இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலைமையை தெரிவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுக்கு ரூ. 100 வருவாய் கிடைத்தால், ரூ. 145 செலவாகிறது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

welfare schemes the reason for the worsening situation Finance Departments explanation