ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னையில் மின்வெட்டை கண்டித்து இரண்டு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :21 ஜூன் 2013, 10:42 pm

சென்னையில் மின்வெட்டை கண்டித்து இரண்டு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளத்தூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதன் விளைவாக அந்தப் பகுதி மக்கள் இரவு தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் மின்வெட்டு சரி செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளும், போலீஸாரும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதேபோல ராயப்பேட்டையில் மின்வெட்டால் பாதிப்படைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.