சென்னையில் மின்வெட்டை கண்டித்து இரண்டு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொளத்தூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதன் விளைவாக அந்தப் பகுதி மக்கள் இரவு தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் மின்வெட்டு சரி செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளும், போலீஸாரும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இதேபோல ராயப்பேட்டையில் மின்வெட்டால் பாதிப்படைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

