நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஓய்வூதியம் வழங்கக் கோரி திண்டிவனம் ராமமூர்த்தி வழக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தனக்கு கிடைக்கவில்லை. அதை வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (80) வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Updated On :22 ஜூன் 2013, 4:25 am IST

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தனக்கு கிடைக்கவில்லை. அதை வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (80) வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளேன். அதேபோல் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளேன். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் கடந்த 10.8.1998 முதல் எனக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எனக்கு ஓய்வூதியம் வரவில்லை. இதற்கான காரணமும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனுப்பிடுமாறு கோரி நாடாளுமன்றச் செயலகத்தின் ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட்டு கடந்த டிசம்பர் மாதம் முதல் எனக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்கிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக நாடாளுமன்ற செயலக கணக்கு அதிகாரி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.