சென்னை செம்பரம்பாக்கம் அருகே 11-ஆவது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
செம்பரம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் 18 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்டடத்தின் 11-ஆவது மாடியில் கட்டட சாரம் கட்டும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த சாரம் சரிந்து விழுந்தது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி நவீன் கொண்ட்ரா (23), 11-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து நசரேத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

