முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனிடம் மாநில தலைமைத் தகவல் ஆணையர் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த கடிதம் மீதான விசாரணையை சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணைய மைய அலுவலகத்தில் இருந்து தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதன்கிழமை மேற்கொண்
டார்.
இதையொட்டி வேலூர் மத்தியச் சிறையில் உள்ள பேரறிவாளன், சிறைக்குள் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் வேலூர் மத்தியச் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இருந்தார்.
சுமார் 25 நிமிடம் இந்த விடியோ கான்ஃபரன்சிங் விசாரணை நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்

ம.பி. ரயிலில் தீ விபத்து என வதந்தி! தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி!

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு
துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் இருவா் கைது! தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


