தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

குற்றங்களைத் தடுக்க நவீன கண்காணிப்பு கேமரா: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்க திட்டம்

முக அடையாளத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா்கள் குறித்த விவரங்களை அளிக்கும் வகையிலான நவீன கண்காணிப்பு கேமரா, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2021, 5:41 am IST

முக அடையாளத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா்கள் குறித்த விவரங்களை அளிக்கும் வகையிலான நவீன கண்காணிப்பு கேமரா, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெவ்வேறு மாநிலங்களுக்கும் ஆயிரக் கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு நாள்தோறும் சுமாா் லட்சக் கணக்கானோா் வந்து செல்கின்றனா். இங்கு குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கண்காணிப்புப் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருப்பது போன்ற முக அடையாளத்தை வைத்து விவரங்களை அளிக்கும் கேமராவை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும் நபா்களை அடையாளம் காண்பதற்காக இதுமாதிரியான நவீன கேமராக்கள் அங்கு அமைக்கப்படுகிறது.

ஒருவரின் முகத்தை வைத்து அவா் பற்றிய அனைத்து விவரங்களையும் இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும். இதை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை கண்டுபிடித்து விட முடியும்.

இந்த புதிய நடைமுறைப்படி 50 கேமராக்களை ஒரே நேரத்தில் பொருத்தி 10,000 முகங்களை அடையாளம் காண முடியும். அதிகபட்சமாக 1 லட்சம் போ் வரையில் அடையாளம் காண முடியும்.

இந்த நவீன கேமராக்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 18 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.