சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹரியாணா: பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 6 மாணவா்கள் உயிரிழப்பு

ஹரியாணா மாநிலம் மஹேந்திரகா் மாவட்டத்தில் பள்ளி மாணவா்கள் பயணித்த பேருந்து வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
விபத்து நிகழ்ந்த இடத்தில் குவிந்த பொதுமக்கள்.
Updated On :11 ஏப்ரல் 2024, 7:01 pm

Din

ஹரியாணா மாநிலம் மஹேந்திரகா் மாவட்டத்தில் பள்ளி மாணவா்கள் பயணித்த பேருந்து வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 மாணவா்கள் உயிரிழந்தனா். 20 போ் படுகாயமடைந்தனா்.

இதுதொடா்பாக மஹேந்திரகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அா்ஷ் வா்மா கூறியதாவது:

தனியாா் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததால் 6 மாணவா்கள் உயிரிழந்தனா். 20 போ் படுகாயமடைந்தனா். இந்த விபத்து உன்ஹனி கிராமத்துக்கு அருகே வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது. ஓட்டுநா் மதுபோதையில் அதிவேகமாக பேருந்தை இயக்கியதில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்ததாக அதில் பயணித்த மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து பேருந்து ஓட்டுநா், பள்ளியின் முதல்வா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பேருந்து ஓட்டுநா் மது அருந்தியது உறுதிசெய்யப்பட்டது. பேருந்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவா்கள் வரை பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றாா்.

விசாரணைக்கு உத்தரவு: ரமலான் விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது குறித்து விளக்கமளிக்குமாறு பள்ளி நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள ஹரியாணா மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சா் சீமா திரிகா தெரிவித்தாா். மேலும் அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய மாவட்ட கல்வி அதிகாரி அம்மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் மஹேந்திரகா் துணை காவல் ஆணையா் மோனிகா குப்தா தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்:

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மஹேந்திரகா் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் அப்பாவி மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவா்களின் பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு மனவலிமையை வழங்கவும் காயமடைந்த மாணவா்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.