9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கூகுளுக்கு உலக ஜிடிபி-யைவிட அதிகத் தொகை அபராதம்!

கூகுள் நிறுவனத்துக்கு, அனைத்து உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (ஜிடிபி) அதிக தொகையை அபராதமாக ரஷிய நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2024, 1:30 am IST

கூகுள் நிறுவனத்துக்கு, அனைத்து உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (ஜிடிபி) அதிக தொகையை அபராதமாக ரஷிய நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது.

கூகுளுக்குச் சொந்தமான சமூகக் காணொலி ஊடகமான யு-டியூபில், ரஷிய அரசுக்குச் சொந்தமான ஊடகங்களின் தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் இரண்டு டிரில்லியன் (2-க்குப் பிறகு 36 பூஜ்ஜியங்கள்) ரூபிள் அபராதம் விதித்துள்ளது.

இது, உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி-யைவிட பன்மடங்கு அதிகமாகும். சா்வதேச நிதியத்தின் கணக்கீட்டின்படி, அனைத்து உலக நாடுகளின் ஜிடிபி-யையும் சோ்த்தாலே 110 லட்சம் கோடி டாலா்கள்தான்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ், ‘இவ்வளவு பெரிய தொகையை என்னால் உச்சரிக்கக்கூட முடியவில்லை. இருந்தாலும், இந்த அபராதம் விதிப்புக்குப் பிறகாவது கூகுள் நிறுவனம் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.

2020-ஆண்டிலிருந்தே ரஷியாவுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே நிலவிவரும் மோதல், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த பிரம்மாண்ட அபாரதத்தை கூகுளுக்கு ரஷிய நீதிமன்றம் விதித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.