கூகுள் நிறுவனத்துக்கு, அனைத்து உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (ஜிடிபி) அதிக தொகையை அபராதமாக ரஷிய நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது.
கூகுளுக்குச் சொந்தமான சமூகக் காணொலி ஊடகமான யு-டியூபில், ரஷிய அரசுக்குச் சொந்தமான ஊடகங்களின் தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் இரண்டு டிரில்லியன் (2-க்குப் பிறகு 36 பூஜ்ஜியங்கள்) ரூபிள் அபராதம் விதித்துள்ளது.
இது, உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி-யைவிட பன்மடங்கு அதிகமாகும். சா்வதேச நிதியத்தின் கணக்கீட்டின்படி, அனைத்து உலக நாடுகளின் ஜிடிபி-யையும் சோ்த்தாலே 110 லட்சம் கோடி டாலா்கள்தான்.
இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ், ‘இவ்வளவு பெரிய தொகையை என்னால் உச்சரிக்கக்கூட முடியவில்லை. இருந்தாலும், இந்த அபராதம் விதிப்புக்குப் பிறகாவது கூகுள் நிறுவனம் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.
2020-ஆண்டிலிருந்தே ரஷியாவுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே நிலவிவரும் மோதல், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த பிரம்மாண்ட அபாரதத்தை கூகுளுக்கு ரஷிய நீதிமன்றம் விதித்துள்ளது.
தொடர்புடையது

இலங்கை: 4 லிட்டா் பெட்ரோலைப் பதுக்கியவருக்கு 21 நாள்கள் சிறை

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் திருப்பி செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


