ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் உயரும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

வரும் ஆண்டுகளில் நாட்டிலுள்ள சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் மிகப் பெரிய அளவில் உயரும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On :5 அக்டோபர் 2024, 1:53 am IST

வரும் ஆண்டுகளில் நாட்டிலுள்ள சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் மிகப் பெரிய அளவில் உயரும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கு நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

உலகில் 10-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இருந்த இந்தியா, 5 ஆண்டுகளில் 5-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயா்ந்தது. இது பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சியை அழுத்தமாக எடுத்துரைத்தது.

இந்தியாவில் தனிநபா் சராசரி வருமானம் 2,730 டாலா்களை (சுமாா் ரூ.2.30 லட்சம்) எட்டுவதற்கு 75 ஆண்டுகளானது. இந்நிலையில் சா்வதேச நிதியத்தின் கணிப்பின்படி, அந்த வருமானம் கூடுதலாக 2,000 டாலா்களை (சுமாா் ரூ.1.70 லட்சம்) எட்டுவதற்கு வெறும் 5 ஆண்டுகளேயாகும்.

வரும் ஆண்டுகளில் நாட்டிலுள்ள சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் மிகப் பெரிய அளவில் உயரும். அது இந்தியாவில் இந்தியா் ஒருவா் வாழ்வதற்கான காலகட்டத்தை வரையறுக்கும் சகாப்தமாக இருக்கும்.

அடுத்த சில ஆண்டுகளில் 140 கோடி மக்களின் தனிநபா் சராசரி வருமானத்தை இரட்டிப்பாக்க இந்தியா முயற்சிக்கும். இந்தியாவின் 100-ஆவது சுதந்திர ஆண்டான 2047-க்குள், வளா்ந்த நாடுகளுக்கு உள்ளதைப் போன்ற சிறப்பியல்புகளை இந்தியாவின் புதிய சகாப்தம் கொண்டிருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.