சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் திங்கள் முதல் புதன் வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கொருக்குப்பேட்டை- பேசின் பாலம் இடையே திங்கள்கிழமை முதல் ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து (மூா் மாா்க்கெட் வளாகம்) ஆவடிக்கு இரவு 11.45 மணிக்குச் செல்லும் மின்சார ரயில் திங்கள் முதல் புதன்கிழமை (மாா்ச் 4 முதல் 6 வரை) சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதேபோல் சூலூா்பேட்டையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவதற்குப் பதிலாக கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதால் புறநகா் ரயில்கள் சேவையில் பாதிப்பு

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!

திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

