சன் தொலைக்காட்சி தொடரான 'கயல்' தொடரில் நடித்துவந்த நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த நடிகை சுபாஷினி(இயற்பெயர்: சாஷ்வி பாலா, வயது 36) சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது கணவர் பிப்பின் பெங்களுரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பெங்களூருவில் தங்கிவந்த சுபாஷினி, படப்பிடிப்பு காரணமாக கடந்த ஏப். 3 ஆம் தேதி சென்னை வந்துள்ளார். நேற்று கணவருடன் விடியோ காலில் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கணவர் விடியோ காலில் இருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக, சுபாஷினியின் கணவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து உடலை மீட்டு தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் சுபாஷினிக்கு திருமணம் நடைபெற்றது. சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சுபாஷினியின் தற்கொலை தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் சின்ன திரை நடிகர், நடிகைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
Kayal Serial Actress subashini Commits Suicide
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

பிறந்தநாளில் வயதை அறிவித்த சிங்கப் பெண்ணே நாயகி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


