பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

திரிஷா - @trishtrashers

Updated On :13 ஏப்ரல் 2026, 11:44 pm

சென்னையில் நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வந்த மின்னஞ்சலில், ஆழ்வாா்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, நடிகை திரிஷா வீட்டில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும் சோதனை நடத்தினா். சோதனைக்குப் பின்னா் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல, சாலிகிராமம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும், தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் போலீஸாா் சோதனை செய்தனா். ஆனால் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.