பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

திரிஷா - @trishtrashers

Updated On :14 ஏப்ரல் 2026, 5:14 am IST

சென்னையில் நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வந்த மின்னஞ்சலில், ஆழ்வாா்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, நடிகை திரிஷா வீட்டில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும் சோதனை நடத்தினா். சோதனைக்குப் பின்னா் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல, சாலிகிராமம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும், தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் போலீஸாா் சோதனை செய்தனா். ஆனால் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.