நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விவேகம் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 நடிகர் அஜித்தின் "விவேகம்' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் 28 திரையரங்குகளின்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2017, 12:15 pm IST

நடிகர் அஜித்தின் "விவேகம்' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் 28 திரையரங்குகளின் உரிமையாளர்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, முதல் ஐந்து நாள்களுக்குத் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சினிமா டிக்கெட் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தற்போது நடிகர் அஜித் நடித்து வெளியாகியிருக்கும் "விவேகம்' திரைப்படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, சில திரையரங்குகளில் பன்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த திரையரங்குகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி தமிழக அரசும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 திரையரங்குகளின் உரிமையாளர்கள், செப்டம்பர் 11 -ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.