சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கோலி சோடா-2 வில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் முன்னணி இயக்குநர்! 

ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கோலி சோடா-2' படத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.   

News image
Updated On :11 அக்டோபர் 2017, 9:22 am

DIN

சென்னை: ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கோலி சோடா-2' படத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.   

ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி 2014-ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக கோலி சோடா-2 வினை இயக்குநர் விஜய் மில்டன் உருவாக்கி வருகிறார். வாலிபால் மற்றும் இதர விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு 'ஸ்போர்ட்ஸ் மூவியாக' இது உருவாகி வருகிறது.  நடிகர் கிஷோர், இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனி உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர்.  

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

Story image

விஜய் மில்டன் இந்த கதாபாத்திரத்தினை உருவாக்கும் பொழுதே இதனை கெளதம் மேனன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து உருவாக்கினார். அதற்காக அவரை நாங்கள் அணுகிய பொழுது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். இது சாதாரண ஒரு கதாபாத்திரம் அல்ல; கதையினை முன்னகர்த்தி செல்லும் வகையில் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது. இறுதி ஷெட்யூல் நடந்து வருகிறது. அநேகமாக கெளதம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில வாரங்களுக்குமுன்னர் வெளியான கோலி சோடா-2 படத்தின் டீசரில் கெளதம் மேனன் வாய்ஸ் ஓவர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.