பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நடிகர் காளி வெங்கட் திருமணம்!

நடிகர் காளி வெங்கட் திருமணம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நேற்று (30.10.2017) காலை நடந்தது.

Published On :

நடிகர் காளி வெங்கட் திருமணம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நேற்று (30.10.2017) காலை நடந்தது. பெற்றோர் நிச்சயம் செய்த அவரது திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.  

கோவில்பட்டியை பூர்விகமாகக் கொண்டவர் வெங்கடேசன். 2008-ம் ஆண்டு முதல் காளி வெங்கட் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.  மெளனகுரு, முண்டாசுபட்டி, இறுதிச் சுற்று, ராஜா மந்திரி, தெறி உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 

சென்னை கே.கே.நகரை சேர்ந்த முத்துராஜ் சாந்தி தம்பதியரின் மகள் ஜனனி (26), என்பவருக்கும் காளி வெங்கட்டுக்கும் (34) திருமணம் எளிமையாகத் திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்தது. 

காளி வெங்கட் தற்போது, 96, ஓணான், காத்தாடி, நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.