நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை, நடிகர் விஜய் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அனிதா (17). நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் கடந்த 1 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்டோர் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அனிதா வீட்டுக்குச் சென்ற நடிகர் விஜய், அனிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பிறகு, அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா்மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா்







