12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மகள் அக்‌ஷராவுடன் இன்று விவேகம் திரைப்படத்தை பார்க்கிறார் கமல் ஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்த முதல் தமிழ்ப் படமான 'விவேகம்’

Published On :

நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்த முதல் தமிழ்ப் படமான 'விவேகம்’ இன்று ரிலீஸாகிறது. மகளுடன் சேர்ந்து இன்று திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கிறார் கமல்.

'Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று கமல் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த இப்படத்தில் அக்‌ஷரா ஹாக்கராக நடிக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பான இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் கதாபாத்திரங்களும் வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. இதற்கு முன்னார் அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய வெற்றிப்பட வரிசையில் விவேகம் இணையுமா என்ற சரியான கணிப்பு இன்று மாலை தெரிந்துவிடும். 

உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் படம் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை டிவீட் செய்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் காலை ஒன்பது மணிக்குத் தனது டிவிட்டரில், 'கடின உழைப்புக்கு மற்றும் படக்குழுவுக்கு ஹாட்ஸ் ஆஃப். ஸ்டண்ட்ஸ் வெறித்தனம்’என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.