எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கண்ணழகி பிரியா வாரியரைத் தொடரும் மலையாள நடிகை நிமிஷா! வைரலாகும் பரோட்டோ காட்சிகள்! விடியோ

முதலில் ஜிமிக்கி கம்மல் ஷெரில், அதனைத் தொடர்ந்து அண்மையில் பிரியா வாரியரின் புருவ அசைவு, தற்போது நிமிஷாவின் பரோட்டா,

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:48 pm IST

முதலில் ஜிமிக்கி கம்மல் ஷெரில், அதனைத் தொடர்ந்து அண்மையில் பிரியா வாரியரின் புருவ அசைவு, தற்போது நிமிஷாவின் பரோட்டா, என்ன ஆச்சு இந்த நெட்டிசன்களுக்கு என்று கேட்கும் அளவிற்கு இந்த மூன்று விடியோக்களை வைரலாக்கிவிட்டார்கள் இணையவாசிகள். மலையாள நடிகை நிமிஷா படப்பிடிப்பு இடைவேளையின் போது கிராமத்திலுள்ள தேநீர் கடை ஒன்றில் பரோட்டா செய்யக் கற்றுக் கொள்ளும் விடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவி, வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

Story image

இந்த விடியோவில் நிமிஷா டீ கடையினுள் உள்ள கிச்சனுக்குள் இருக்கிறார். அவர் முன்னால் பரோட்டா மாவும் கல்லும் உள்ளது. ஒற்றை கையால் மாவை எடுத்து லாவகமாகத் திரட்டி பரோட்டாவை தட்டுகிறார் நிமிஷா. சரியா வந்திருக்கா என்று அருகிலிருக்கும் பரோட்டா மாஸ்டரிடம் கேட்க, அதற்கு அவர் வேக வைத்த பரோட்டாவை எடுத்து நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் ஏற்கனவே சுட்டிருந்த பரோட்டாவை எடுத்துப் போட, அதற்கு நிமிஷா மறுப்பாக தலையாட்டியபடி, சிரித்துக் கொண்டே, கையை சுட்டுக் கொள்ள மாட்டேன்பா என்று சொல்கிறார். பரோட்டா தயாரிப்பது ஒரு கலை அதை ஒரே நாளில் கற்றுக் கொள்வதெல்லாம் முடியாத காரியம் என்று சொல்லியபடி கிளம்புகிறார்.

Story image

நிமிஷா சஜயன் 'ஈடா' மற்றும் ‘தொண்டிமுதலும் திரிக்சாக்‌ஷியும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றுள், திலீஷ் போத்தன் இயக்கிய ‘தொண்டிமுதலும் திரிக்சாக்‌ஷியும்’ என்ற படம்தான் அவரது முதல் படம். அதில் அவர் ஏற்று நடித்த ஸ்ரீஜா என்ற கதாபாத்திரம் அவருக்கு  நல்ல அறிமுகமாக அமைந்தது. இதில் நிமிஷாவுடன் ஃபகத் ஃபாசில் மற்றும் சூரஜ் நடித்துள்ளார்கள். இதுவரை இரண்டே படங்களில் நடித்துள்ள நிமிஷா, ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அடுத்து நிமிஷா டொவினோ தாமஸுடன் நடித்திருக்கும் படம் 'குப்றசித்த பையன்'. மதுபால் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஒரு கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 

Story image

இதற்கு முன்னால் மலையாள நடிகை அனுஸ்ரீ படப்பிடிப்பு இடைவேளையில்  தோசை சுட்ட விடியோ இணையத்தில் ஒரு சுற்று சுற்றி வந்தது. தற்போது பரோட்டா. இது போன்ற காட்சிகள் ஏன் ரசிக்கபடுகின்றன என்பது புரியாத புதிர்தான். பிரியாவின் புருவ அசைவுகளாகட்டும், நிமிஷாவின் பரோட்டா நிமிடங்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்ட நிலையில், இந்த நடிகைகள் திடீர் புகழுக்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் சரி என்கிறது மலையாள திரைவட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.