தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

'காளி' திரைப்படத்தில் வரும் 'அம்மா' பாடல் கொண்டாடப்படும்: பாடலாசிரியர் அருண்பாரதி

சயின்ஸ் திரில்லர் வகையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' எனும் படத்தில்...

News image
Updated On :8 மார்ச் 2018, 7:48 pm IST

சயின்ஸ் திரில்லர் வகையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' எனும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். 

இப்படத்தில் பாடலசாரியிரகாப் பணியாற்றியுள்ள அருண்பாரதி கூறுகையில்,

விஜய் ஆன்டணி இசையில் எப்பொழுது பாடல் எழுதினாலும், என் பேனா துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடும். மக்களின் ரசனையையும், மாறி வரும் தமிழ் சினிமாவின் சூழலையும் அவர் நன்கு உணர்ந்தவர். அதேபோல், ஆளுமையான தமிழ் சினிமா இயக்குநர்களில், கிருத்திகா உதயநிதி அவர்களும் ஒருவர். இருவரின் ரசனைக்கும் உட்பட்டு, கதைக்கு என்ன தேவையோ, அதை மிகச் சரியாக அந்தப் பாடலில் எழுதியிருக்கிறேன். திரைப்படம் பார்க்கும் பொழுது அதை உணர்வீர்கள். 

“இதயத்தின் மையப் பகுதியில் இருக்கை விரித்து அமர்ந்தாய் ; உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும் ஒருத்தி வடிவில் கொடுத்தாய்... என்ற வரிகளை இயக்குநர் கிருத்திகா உதயநிதி மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் பாராட்டினார்கள். இந்தப் பாடலை விட, இதில் அம்மாவைப் பற்றிய பாடல் ஒன்றையும் நான் எழுதியிருக்கிறேன். 

ஒவ்வொரு முறை அம்மா பாடல் எழுதினாலும், அது புதிதாக ஏதோ ஒன்றைத் தந்து விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில், காலம் காலமாக கொண்டாடப்பட்டு வரும் அம்மா பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்றார். 
    
மேலும் சண்டக்கோழி-2, களவாணி-2, எட்டு, மரகதக்காடு, என பல்வேறு திரைப்படங்களுக்கு பாடலாசிரியர் அருண்பாரதி பாடல்கள் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.