மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு   

ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 நவம்பர் 2018, 12:12 pm

DIN

சென்னை: ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படமானது வரும் நவம்பர் 29 (வியாழன்) அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்திய செல்போன் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு என்னும் அமைப்பின் சார்பில் இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 

இந்த மனுவில், '2.0' படத்தில் செல்போன் பயன்பாடு குறித்து தவறாக சித்தரிப்பது போன்ற காட்சிகள்  இடம்பெற்றுள்ளது என்பது படத்தின் டீசரில்  தெரிகிறது. எனவே பொதுமக்களுக்குத் தவறான கருத்துக்களை பரப்பும் வாய்ப்பு இருப்பதால். '2.0' படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. 

இந்த மனு தொடர்பாக  படத்தின் தயாரிப்புத் தரப்பு மற்றும் மத்திய தணிக்கை வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.