பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ராபர்ட்-ராஜசேகர் ஆகியோரில் ஒருவரான ராபர்ட் ஆசிர்வாதம் இன்று காலை 10 மணிக்கு பொத்தேரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
டி.ஆரின் முதல் படமான ஒரு தலை ராகம் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார் ராபர்ட். சென்னை கொளத்தூரில் நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.