கூத்துப் பட்டறை ந.முத்துச்சாமி நேற்று முன் தினம் உடல்நலக்குறைபாட்டால் காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் நவீன நாடக வடிவத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவரான ந.முத்துச்சாமியின் பட்டறையில் நடிப்பைக் கற்றவர்கள் பலர் இன்று தமிழ் சினிமாவில் பிரதான இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் பசுபதி, விமல், விதார்த் மட்டும் கலைராணியை தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். நடிகர் விஜய் சேதுபதி கூத்துப் பட்டறையில் ஒரு கணக்காளராக பணிபுரிந்த போதும் அவருக்குள்ளிருந்த நடிகனை வெளிக்கொண்டு வந்தவர் நா.முத்துச்சாமி தான் என விஜய் சேதுபதியே தனது நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமியின் வாழ்க்கையை நினைவு கூரத்தக்க விதத்திலும் அவருடன் விஜய் சேதுபதியின் உறவு குறித்தும் ஓரளவுக்கு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தத் தக்க விதத்திலும் நாசருக்கான கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நாசரின் கதாபாத்திரம் வெளிப்படுத்தியது கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமியின் நாடக அர்ப்பணிப்பு உணர்வுகளைத்தான்.
நடிகர்கள் பசுபதி, விஜய் சேதுபதி, விமல், விதார்த், கலைராணி தவிர்த்து மேலும் பல திறமையான நடிகர், நடிகைகளை உருவாக்கித் தந்திருக்கிறது கூத்துப்பட்டறை.
நடிகர்கள் நடிப்பதற்கான பயிற்சியை இப்படியான கூத்துப்பட்டறை மூலமாக முழுமையாகக் கற்றுக் கொண்டு வெளியேறி அதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு திரைப்பட வாய்ப்புகளைப் பெற முயற்சித்தால் மட்டுமே அவர்களது நடிப்பு மெருகேறியதாக இருக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர் கலைஞர் நா.முத்துச்சாமி.
தனது வாழ்நாள் முழுமையையும் நாடகக் கலைக்காக அர்ப்பணித்தவரான நா.முத்துச்சாமிக்கு அவரது கூத்துப்பட்டறை மாணவர்களான நடிகர்கள் விதார்த், விமல், பசுபதி, உள்ளிட்டோர் நடனமாடி இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
தங்களது நாடக குருவுக்கு தாங்கள் செய்யும் கலாப்பூர்வமான இறுதி அஞ்சலியாக இந்த நடனத்தை அவர்கள் கருதுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



