தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குலு மணாலியில் நிலைமை எப்படி உள்ளது?: நடிகர் கார்த்தி தகவல்!

இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அங்குதான் உள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்...

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 8:47 am

கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மலையில் இருந்த தேவ் படக்குழுவினர் 140 பேர் வெள்ளத்தால் சிக்கியுள்ளார்கள். சாலைப் போக்குவரத்து தடைப்பட்டதால் காரில் 5 மணி நேரம் தவித்த கார்த்தி ஒருவழியாக மீண்டு, தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ளார். நிலச்சரிவினால் சாலைகளைப் பயன்படுத்தமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் ஊர் திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   இதுபற்றி நடிகர் கார்த்தி ட்வீட் செய்ததாவது:

நேற்றிரவு எங்களில் சிலர் சென்னைக்குத் திரும்பிவிட்டோம். இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அங்குதான் உள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். அங்கு மின்சாரம் இல்லை. சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் கழித்து அவர்கள் திரும்பிவருவார்கள். மழை விரைவில் நிற்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார். 

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு ரூ. 55 கோடி செலவில் உருவாகி வரும் ஆக்‌ஷன் படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. தேவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கிவருகிறார். இசை - ஹாரிஸ் ஜெயராஜ். புதிய இயக்குநர், ஆக்‌ஷன் படம், ரூ. 55 கோடி பட்ஜெட், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற அம்சங்களால் இந்தப் படம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.