தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

‘போதை... கோதை’ பெண்ணை விடப் பெரிய போதை உலகில் இல்லை என்கிறது இப்பாடல்!

இந்தப் பாடலைக் கேட்டு யாராவது புகையுறுஞ்சும், உயிர் உறுஞ்சும் போதை பழக்கத்தை விட்டொழித்தார்கள் என்றால் சரி! 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:34 pm IST

கெளதம் வாசுதேவ் மேனனின்  ‘ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட்டின்’ அடுத்த சிங்கிள்ஸ் ‘போதை... கோதை’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. பாடலின் நோக்கம் அழகானது. அர்த்தமுள்ளது. ஆண், பெண் பேதமில்லாமல் நண்பர்களாகச் சேர்ந்து கடற்கரையில் பொழுதைக் கரைத்துக் கொண்டிருக்கும் போது விளையாட்டாகத்தான் தொடங்குகின்றது போதை வஸ்துக்களின் புழக்கமும் பழக்கமும். அதை விளையாட்டாகக் கற்றுக் கொண்டு விட முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம் பேர். ஆனால், அந்தப் போதையெல்லாம் நிஜமான போதை உணர்வைத் தருவதில்லை. ஒரு பெண்ணுடனான காதல் தரும் போதைக்கு முன் இவையெல்லாம் தூசு எனும்படியாக இப்பாடலில் நீள்கின்றது மதன் கார்க்கியின் பேனா. இசை கார்த்திக், பாடலில் காதல் ஜோடிகளாக கவனம் ஈர்க்கிறார்கள் ஐஸ்வர்யா ராஜேஷும், அதர்வாவும்.

போதை... கோதை பாடலைக் கேட்க விடியோ லிங்க்...

இந்தப் பாடலைக் கேட்டு யாராவது புகையுறுஞ்சும், உயிர் உறுஞ்சும் போதை பழக்கத்தை விட்டொழித்தார்கள் என்றால் சரி! 
 

Related Article

மனிஷா கொய்ராலா, தன் வாழ்வில் கண்டடைந்த மிக மோசமான உண்மை!

ரன்பீர் கபூருடன் காதலா? தங்கை அலியா பட் குறித்த கேள்விக்கு அக்கா பூஜா பட்டின் ‘நச்’ பதில்!

மகள்களுக்குள் வேறுபடும் நடிகர் ஜெமினி மீதான புரிதல்!

‘காலா’ வைப் புரிந்து கொள்ள பக்தியில் மூடத்தனம் இல்லாத மனம் வேண்டும்!

‘காலா’ திரைவிமர்சனம் - 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.