கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சந்திரபாபு நாயுடு கட்சி வேட்பாளருக்கு நடிகை சமந்தா ஆதரவு!

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அனகனி சத்யா பிரசாத் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற...

News image
Updated On :11 ஏப்ரல் 2019, 7:01 am

DIN

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், சிக்கிம் மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒடிஸா சட்டப் பேரவையிலுள்ள சில தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

ஆந்திரத்தில் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தனித்தனியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிக்கப்பட்டன. அதையடுத்து நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.  தெலுங்கு தேசம் கட்சியின் 37 ஆண்டுகால வரலாற்றில், தேர்தலை அக்கட்சி தனித்து எதிர்கொள்வதும் இதுதான் முதல்முறையாகும்.

இந்நிலையில், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெபல்லே சட்டமன்ற தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளருமான அனகனி சத்யா பிரசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல நடிகை சமந்தா. இதுகுறித்து விடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அனகனி சத்யா பிரசாத் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று ரெபல்லே சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்த ஒரு கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்த சமந்தா கூறியதாவது: ஆமாம். அனகனி சத்யா பிரசாத்துக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளேன். அவர் என்னுடைய குடும்ப நண்பர். நான் ஹைதராபாத்துக்குக் குடியேறியது முதல் அவரையும் அவருடைய சகோதரி டாக்டர் மஞ்சுளா அனகனியையும் நான் அறிவேன். அவர் நல்ல மனிதர் என்பதால் என் ஆதரவைத் தெரிவித்துள்ளேன் என்று தன் நிலைப்பாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் சமந்தா. அவருடைய பிரதியுஷா அறக்கட்டளையின் இணை நிறுவனர், மஞ்சுளா அனகனி. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.