பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம்: அதிகாரி மீது நடவடிக்கை!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கைப் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அலுவலர் மீது...

News image
Updated On :23 ஏப்ரல் 2019, 9:03 am

எழில்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கைப் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக 95 மக்களவை தொகுதிகளில் கடந்த வாரம் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. 

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, தென் சென்னை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த விருகம்பாக்கம் சட்டமன்றத்தொகுதியில் சாலிகிராமத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவர் வாக்குப் பதிவு செய்தபோது வாக்குச்சாவடியில் சர்ச்சை ஏற்பட்டது. வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை முதலில் செலுத்தவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து அதே வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார் சிவகார்த்திகேயன். கடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு செய்த சிவகார்த்திகேயன், அப்போது பயன்படுத்திய வாக்காளர் அடையாள அட்டையை இந்த முறையும் எடுத்து வந்துள்ளார். எனினும் புதிய வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதும் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு அவர் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சை எழுந்தது. 

இதுதொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்ததாவது: இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத சிவகார்த்திகேயன் தனது வாக்கைப் பதிவு செய்ய தேர்தல் அலுவலர் அனுமதித்துள்ளார். இதனால் தேர்தல் நடத்திய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.