மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதனன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது: சிறப்பு அதிகாரி சேகர் அறிவிப்பு 

புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2019, 3:24 pm

சென்னை: புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தார்.

இந்நிலையில் புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகிகளால் புதனன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட பொதுக்குழு கூட்டமானது நடைபெற வாய்ப்பில்லை என்பது தொடர்பான  அறிவிப்பு தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.