செய்திகள்
அருண் விஜய்யின் 31-வது படம் பூஜையுடன் தொடங்கியது!
ஈரம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அறிவழகனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அருண் விஜய்.
ஈரம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அறிவழகனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அருண் விஜய். இது அவருடைய 31-வது படம்.
அருண் விஜய் - அறிவழகன் கூட்டணி இதற்கு முன்பு குற்றம் 23 என்கிற படத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக ரெஜினா கேசண்ட்ரா நடிக்கிறார். இசை - சாம் சிஎஸ். படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
2020 ஏப்ரலில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.