ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரஜினி, கமலை கலாய்த்தாரா பாடலாசிரியர் அருண் பாரதி?

கவிஞரும் பாடல் ஆசிரியருமான அருண் பாரதி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்

News image
Updated On :19 பிப்ரவரி 2019, 2:44 pm IST

கவிஞரும் பாடல் ஆசிரியருமான அருண் பாரதி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை விமரிசித்து பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அருண் பாரதி, அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்திற்கு அண்மையில் பாடல் எழுதியவர்.

ட்விட்டர் வலைதளத்தில் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வந்த அருண் பாரதி,  'நடிகன் ஓய்வுபெற்றால் தலைவனாக நினைப்பதும் ராணுவவீரன் ஓய்வு பெற்றால் வாட்ச்மேன் வேலை பார்ப்பதும் இந்த தேசத்தில் மட்டும்தான்' என பதிவிட்டிருந்தார்’. இதைப் படித்த நெட்டிசன்கள் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீதான தற்கொலை படை தாக்குதலை பற்றி பதிவிடுவதற்கு ஏன் நடிகர்களை இழுக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

Story image

மேலும் இந்த ட்வீட்டில் நேரடியாக கமல் மற்றும் ரஜினி போன்ற நடிகர்களை தாக்கும் தொனி இருப்பதால் அவர்களது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அருண் பாரதியை கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடி வருகின்றனர். இந்நிலையில் அப்பதிவை டெலீட் செய்யாமல், அதே சமயத்தில் அதற்கு பதிலாக அருண் பாரதி இன்னொரு ட்விட்டர் பதிவில் மன்னிப்பு கேட்டிருந்தார், 'யாரையும் புண்படுத்தும் நோக்கம் என் எழுத்துக்களுக்கு இல்லை. மிக மிகச் சாதரணமாக மனதில் தோன்றிய கருத்தை நான் பதிவிடுகிறேன். அதை தவறாக புரிந்து, திரித்து பரப்பாதீர்கள். யாரையேனும் புண்படுத்தினால் வருந்துகிறேன். இன்னும் கவனமாக பதிவிட முயல்கிறேன். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.