பிக் பாஸ் வீட்டுக்குள் போலீஸ்: நடிகை வனிதா விஜய்குமாரிடம் விசாரணை!

சொந்த மகளையே கடத்திய வழக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை வனிதா விஜய்குமாரிடம் தெலங்கானா காவல்துறையினர்...
பிக் பாஸ் வீட்டுக்குள் போலீஸ்: நடிகை வனிதா விஜய்குமாரிடம் விசாரணை!

சொந்த மகளையே கடத்திய வழக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை வனிதா விஜய்குமாரிடம் தெலங்கானா காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

நடிகை வனிதா விஜய் குமார் தனது மகளைக் கடத்தியதாக அவருடைய 2-வது கணவரான ஆனந்த்ராஜ், தெலங்கானா காவல்துறையிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இதையடுத்து வனிதா விஜய்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் திருமணம் விவாகரத்து ஆன பிறகு ஆனந்த்ராஜை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் 2012-ல் ஆனந்த்ராஜையும் வனிதா விவாகரத்து செய்தார். 2-வது கணவரைப் பிரிந்த வனிதா, தனது மகள் ஜெனிதாவைப் பார்க்க ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துவந்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து வனிதா மீது காவல்துறையிடம் புகார் அளித்தார் ஆனந்த்ராஜ். வனிதா விஜய்குமாருக்கு நிரந்தர முகவரி இல்லாததால் அவரைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார். 

வனிதா, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வனிதா விஜய்குமாரையும் அவருடைய மகளையும் தேடிவந்த தெலங்கானா காவல்துறை தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றுள்ளார்கள். விசாரணைக்குப் பிறகு அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com