ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில்

யாரும் இல்லாத மைதானத்தில் விளையாட முடியாது தலைவா. எல்லோரும் இருந்தால்தான் விளையாடமுடியும்...

News image
Updated On :4 மே 2019, 10:08 am

எழில்

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனனி, ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகியுள்ள படம் - தர்மபிரபு. கதாநாயகன் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் யோகி பாபு பேசியதாவது:

சம்பளமாக ஒருநாளைக்கு ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் வாங்குவதாக ஞானவேல் ராஜா பேசியபோது சொன்னார். வருமான வரியே இன்னும் ரூ. 20 லட்சத்தையே செலுத்தமுடியாமல் இருக்கிறேன். எனக்கே பணம் வருவதில்லை. எல்லோரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே நான் ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் எல்லாம் கேட்கவில்லை. இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளத்துக்கு வந்தவன் நான். எல்லாத் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் அறிந்தவன். நேற்று கூட ஒரு இயக்குநர் தன்னுடைய குடும்ப விஷயங்களை என்னிடம் சொன்னார். ஊர் தஞ்சாவூர், நான் ஜெயித்தால் தான் என் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். நான் உனக்கு அண்ணன் போல என்று உடனே  தயாரிப்பாளரிடம் போனில் பேசினேன். சார் எனக்கான சம்பளத்தில் பாதி கொடுத்தால் போதும். அந்தப் பையனின் முன்னேற்றத்தைப் பாருங்கள் என்றேன். எனவே என்னைப் பற்றி, என்னைப் பிடிக்காதவர்கள் வெளியே நாலுவிதமாகச் சொல்வார்கள். அதுகுறித்து நேராக என்னிடம் கேட்டால்தான் பதில் கிடைக்கும். அதனால் நான் ரூ. 10 லட்சமோ, ரூ. 15 லட்சமோ கேட்கவில்லை. நான் உங்களில் ஒருவன் தான்.

யாரும் இல்லாத இடத்தைப் பிடித்தார் என என்னைச் சொல்கிறார்கள். யாரும் இல்லாத மைதானத்தில் விளையாட முடியாது தலைவா. எல்லோரும் இருந்தால்தான் விளையாடமுடியும். இருக்காங்க. அதில் விளையாடுகிறவர்களிடம் தானே திறமை உள்ளது. எனக்குச் சரியான படக்குழு அமையும்போது நான் சிக்ஸ் அடிக்கிறேன். அதனால் யாரும் இல்லாத இடத்தில் யாரும் விளையாடமுடியாது. இருந்தால்தான் விளையாடமுடியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.