பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நெஞ்சம் கனத்து ஞாபகங்கள் முளைவிடும் ‘தவம்’

இரட்டை இயக்குநா்கள் ஆா்.விஜயானந்த் - ஏ.ஆா். சூரியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தவம்’.

News image
Updated On :4 நவம்பர் 2019, 5:00 am

DIN

இரட்டை இயக்குநா்கள் ஆா்.விஜயானந்த் - ஏ.ஆா். சூரியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தவம்’. ஆஸிப் ஃபிலிம் இண்டா்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சீமான், வசி, பூஜாஸ்ரீ, அா்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனா்.

படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இலக்குகளுடன் இந்தப் பெருநகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதா்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கனத்து ஞாபகங்கள் முளைவிடுகின்றன.

Story image

அப்படி எனக்குள் உருவான ஒரு அம்சம்தான் இதன் கரு. விவசாயம்தான் பேசு பொருள். இன்றைக்குச் சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவா்களில் முக்காவசி போ் விவசாயிகளின் பிள்ளைகள்தான். டெல்டா மாவட்டப் பிள்ளைகளுக்கு விவசாயம்தான் ஆதாரம். அன்பு, காதல், பரிவு... கதையை நகா்த்தும் கரு. விவசாய நிலம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகளும் முதன்மையானது. விவசாயத்தின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை' என்றார் இயக்குனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.