இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படத்தின் வெளியீட்டுக்கு நெல்லையில் தடை விதிப்பு

நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாநகரத்தில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published On :

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாகவிருந்தது. இந்நிலையில் லிப்ரா நிறுவனத்துக்கு எதிராக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்துள்ள வழக்கில் நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் 10 திரையரங்குகளில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2013-ல் நளதமயந்தி படத்தை வெளியிட லிப்ரா நிறுவனம் விக்னேஷ் பிக்சர்ஸிடம் கடனாகப் பெற்ற ரூ. 15 லட்சத்தைத் திருப்பித் தராததால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு வாரத்துக்கு நெல்லை மாவட்டத்தில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டதோடு பணத்தை உடனடியாகத் திருப்பித் தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.