தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஷாருக்கான் பட தயாரிப்பாளர் குடும்பத்தில் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் அவருடைய இரு மகள்கள் என ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

News image

ஸோயா - ஷாஷா

Updated On :9 ஏப்ரல் 2020, 5:15 am

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் அவருடைய இரு மகள்கள் என ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 88,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 5,700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை எக்ஸ்பிரஸ், ரான் ஒன் போன்ற பிரபலமான ஹிந்திப் படங்களைத் தயாரித்தவர் கரிம் மொரானி. இவருடைய மகள் ஷாஷாவுக்கு கரோனா வைரஸ் தொற்று கடந்த வாரம் உறுதியானது. மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் ஷாஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பு இலங்கையிலிருந்து ஷாஷா திரும்பினார். இதனால் ஜுஹுவில் உள்ள வீட்டில் கரிம் மொரானி குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

இந்நிலையில் தற்போது அந்தக் குடும்பத்தில் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஷாஷாவுக்கு அடுத்ததாக கரிம் மொரானி மற்றும் அவருடைய இன்னொரு மகளும் நடிகையுமான ஸோயா மொரானி என மேலும் இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸோயா கடந்த மாதம் ராஜஸ்தான் சென்று வந்தார். கரின் மொரானி, ஸோயா, ஷாஷா ஆகிய மூவருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.