முதல் முதலில் ஒளிப்பதிவாளரைத் தான் தேர்வு செய்வேன்: மணி ரத்னம்
ஒளிப்பதிவாளர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள் என்று மணி ரத்னத்திடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.


இன்ஸ்டகிராம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார் பிரபல இயக்குநர் மணி ரத்னம்.
அப்போது, ஒளிப்பதிவாளர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள் என்று மணி ரத்னத்திடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு மணி ரத்னம் அளித்த பதில்:
நான் சொல்ல வரும் கதையில் ஆர்வம் செலுத்தும் ஒளிப்பதிவாளரைத் தான் நான் தேர்வு செய்வேன். அவர் ஒளிப்பதிவில் மட்டும் கவனம் செலுத்துபவராக இருக்கக் கூடாது. ஒரு படத்தைத் தொடங்கும் முன்பு, முதலில் ஒளிப்பதிவாளரைத் தான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...