பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை வெளியிட்டார் மாதவன்

தங்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்...
பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை வெளியிட்டார் மாதவன்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பொதுத்தேர்வில் தான் எடுத்த மதிப்பெண்ணை வெளியிட்டுள்ளார் நடிகர் மாதவன். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

பொதுத்தோ்வு முடிவுகளைப் பெற்றவர்களுக்கு - தங்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். மற்றவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது - பொதுத்தேர்வில் நான் 58% மதிப்பெண்கள் எடுத்தேன். விளையாட்டு இன்னும் ஆரம்பமாகவில்லை நண்பர்களே என்று மாணவர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் ட்வீட் செய்துள்ளார். 

மாதவனின் இந்த ட்வீட்டுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com