துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த பிப்ரவரி 28 அன்று வெளியானது.
இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி பாராட்டியுள்ளார். தன்னிடம் போனில் ரஜினி பாராட்டியது குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் தேசிங் பெரியசாமி. அதில் அவர் கூறியதாவது:
பிரமாதம் அருமை... படம் பார்த்து அசந்துவிட்டேன். வாழ்த்துகள். உங்களுக்குப் பெரிய வருங்காலம் உள்ளது. - காலையில் இருந்து இது மட்டும் தான் காதுல கேட்டுட்டே இருக்கு. பறந்துகிட்டு இருக்கேன். கடவுளுக்கு நன்றி. இந்த நாளுக்காகக் காத்திருந்த அனைவருக்கும் நன்றி என்று எழுதியிருந்தார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் தேசிங்கு பெரியசாமியுடன் ரஜினி பேசியதன் ஆடியோ வெளியாகியுள்ளது. இத்தனை நாள் படம் பார்க்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும். மிகவும் தாமதமாகச் சொல்கிறேன். வாழ்த்துகள். எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். நிஜமாகவே சொல்கிறேன். யோசித்து வையுங்கள் என்று தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி பேசியுள்ளார்.
இதுபற்றி தேசிங் பெரியசாமி ட்வீட் செய்ததாவது: எங்களுடைய உரையாடல் கசிந்ததில் நான் வேதனையடைந்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி அழைப்பு. என்னுடைய ட்வீட்டிலும் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடந்துவிட்டது. எல்லாமே நன்மைக்கே என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குனி மாதப் பலன்கள் - துலாம்

பங்குனி மாதப் பலன்கள் - விருச்சிகம்

பங்குனி மாதப் பலன்கள் - தனுசு
ஓடிடியில் தாய் கிழவி எப்போது?
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

