முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேனா?: இயக்குநர் பாரதிராஜா விளக்கம்

எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. மக்களின் நலன் கருதி நாங்களே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்...

News image
Updated On :6 மே 2020, 8:30 am

DIN

சென்னையிலிருந்து தேனி சென்ற இயக்குநர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பாரதிராஜ வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:

பாரதிராஜா, தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. நடந்தது என்ன? என் சகோதரி தேனியில் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக முறைப்படி அதற்கான அனுமதிச்சீட்டு வாங்கி, பல மாவட்டங்களைக் கடந்து வந்து என் சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சையில் இருக்கிறார்.

நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்ததால் தேனி நகராட்சி சுகாதார அமைப்பிடம் பேசி, தற்காப்புக்காக என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள் என்றேன். மூன்று முறை பரிசோதனைகள் செய்தார்கள். சென்னையில் முதலில் பரிசோதனை செய்தார்கள். பிறகு வழியில் ஆண்டிபட்டியிலும் இப்போது தேனியிலும் பரிசோதனை செய்ததில் மூன்றிலும் நெகடிவ் என்றே முடிவுகள் வந்தன. என்னுடன் அழைத்து வந்த உதவியாளர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாக தேனியில் உள்ளோம். எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. மக்களின் நலன் கருதி நாங்களே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். இதுதான் நடந்த உண்மை.

எனது உதவியாளர்களுடன் இணைந்து அடுத்த படத்தின் கதைக்கான விவாதத்தில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் என பாரதிராஜா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.