தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

jailer 2

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு. - படம்: X/sun pictures

Published On :

ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் - 2 படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், முக்கிய காட்சியொன்றில் ரஜினியுடன் நடிகர்கள் மோகன்லால், பவன் கல்யாண், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ. 160 கோடிக்குப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Following the completion of filming for Jailer 2, the film crew celebrated by cutting a cake.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.