ஜெயிலர் - 2 திரைப்படத்தில் ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நடிகர் மோகன்லால் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கான தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாகவும் ஒரே ஒரு காட்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகிய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளின் சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், திடீரென ஷாருக்கான் விலகியதால் அந்தக் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கானால் பழைய தோற்றத்தை மாற்ற முடியாது என்பதாலும் அவர் நடித்த கிங் படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஜெயிலர் - 2 படத்திலிருந்து அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
Summary
actor pawan kalyan replaces actor sharukhkhan role in jailer - 2 movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









