ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாள்களுக்கும் மேல் கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
ரஜினியுடன் பல நட்சத்திர நடிகர்களும் இணைந்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் இந்தியளவில் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாத வெளியீடாகத் திரைக்கு வர இருந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் ஜெயிலர் - 2 படத்தை செப்டம்பர் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ரஜினி - கமல் படத்தின் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.
Reports indicate that there has been a change in the release of the film Jailer 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ் படப்பிடிப்பை முடித்த மம்மூட்டி!
ஜெயிலர் - 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன்?

ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து: இளைஞர் பலி!
டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!




