அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 12:09 pm

DIN


சென்னையில் நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு இன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார், உடனடியாக காவல் துறை உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

அதிகாரிகளின் உத்தரவின்பேரில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் விக்ரம் வீட்டில் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. 

இதையடுத்து வதந்தியைப் பரப்பும் நோக்கில் அந்த அழைப்பு வந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து சென்னை போலீஸாா், சைபா் குற்றப்பிரிவுடன் இணைந்து அந்த அழைப்பு குறித்து விசாரணை செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.