தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடிகை சித்ரா தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ள கோட்டாட்சியர்

இரு மாதங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் நடைபெற்றதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்...

News image

படம் - www.instagram.com/chithuvj/

Updated On :9 டிசம்பர் 2020, 7:24 am

நடிகை சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் இரு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்

சின்னத்திரையின் பிரபல நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சித்ரா, சென்னையில் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

2003-ல் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கவனம் பெற்ற சித்ரா, ஜெயா, ஜீ தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். 2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் என்பவருடன் சித்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சித்ராவில் உடல் காலை 7 மணிக்குக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்குப் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. பிறகு அவருடைய உடல் குடும்பத்தினரிடம் வழங்கப்படும். சித்ராவின் தந்தை காமராஜ், காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஹேமந்த் மற்றும் சித்ராவின் குடும்பத்தினரிடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். அதில், சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் இரு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 19 அன்று இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதால் தற்போது சித்ராவின் மரணம் குறித்து முகப்பேர் மேற்கு கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார். சித்ராவின் குடும்பத்தினரிடம் தற்கொலை குறித்து விரிவாக விசாரணை நடத்தி அவர் அறிக்கை தாக்கல் செய்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.