ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆபாச உடை அணிந்து உடற்பயிற்சி செய்ததாகப் பூங்காவில் தாக்கப்பட்ட கோமாளி பட நடிகை

பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தன்னைச் சிலர் தாக்கியதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 2:45 pm IST

பெங்களூர் பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தன்னைச் சிலர் தாக்கியதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

பெங்களூர் அகாரா ஏரியில் உள்ள பூங்கா ஒன்றில் தனது தோழிகளுடன் இணைந்து நேற்று உடற்பயிற்சி செய்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது கவிதா ரெட்டி என்கிற ஒரு பெண்மணியும் சில ஆண்களும் சம்யுக்தாவையும் அவருடைய தோழிகளையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார்கள். 

உடற்பயிற்சி செய்வதற்காகத் தாங்கள் அணிந்திருந்த உடை ஆபாசமாக இருந்ததாகவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும் தன் மீது அவர்கள் குற்றம் சுமத்தியதாக சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார். காவல்துறைக்கு கவிதா ரெட்டி புகார் அளித்ததால் உடனடியாகச் சம்பவ இடத்துக்குக் காவலர்கள் வந்துள்ளார்கள். சம்யுக்தாவையும் அவருடைய தோழிகளையும் பூங்காவை விட்டு வெளியேறுமாறு காவலர்கள் கூறியுள்ளார்கள். எனினும் பூங்காவின் கதவை கவிதா ரெட்டியும் அவருடன் இருந்தவர்களும் பூட்டிவிட்டார்கள். சம்யுக்தாவைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும், அவர் மீது நாங்கள் புகார் அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். 

தங்களை வெளியே விட மறுத்ததால் கதவைத் திறக்க சம்யுக்தா முயன்றுள்ளார். அப்போது ஒருவர் சம்யுக்தாவின் கையில் தாக்கியுள்ளார். சம்யுக்தாவும் அவருடைய தோழிகளும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி காவலர்கள் சம்யுக்தா பூங்காவை விட்டு வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளார்கள். இதன்பிறகு இரு தரப்பும் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளது.

இச்சம்பவம் பற்றி கண்ணீருடன் இன்ஸ்டகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார் சம்யுக்தா ஹெக்டே. பூங்காவில் தாங்கள் அணிந்த உடை என்ன என்பதையும் விடியோவில் அவர் விளக்கியுள்ளார். உடற்பயிற்சி உடையை அணிந்ததற்காக எங்களை மிகவும் கேவலமாகப் பேசி தாக்கியுள்ளார்கள். இதுபோன்ற அத்துமீறல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.