அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நடிகர் யோகி பாபு மீது முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் புகார் (விடியோ)

பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும் குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று...

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 1:19 pm IST

நடிகர் யோகி பாபு மீது தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஷஷிகாந்த் இப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மண்டேலா படத்துக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

யோகி பாபு நடித்த மண்டேலா படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளன. எனவே இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், நடிகர் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் கூறியதாவது:

எங்கள் மருத்துவர் சமுதாய மக்கள் தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளார்கள். யோகி பாபு நடித்த மண்டேலா படம் மருத்துவர் சமுதாயத்தையும் முடி திருத்தும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தியுள்ளது. படம் முழுக்க முடி திருத்தும் தொழிலாளர்களை எந்தளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தியுள்ளார்கள். காரில் ஏற்றாமல் அலைக்கழிப்பதும் பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும் குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று கூறுவதும் என எங்களை நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனால் அனைவரும் மனவேதனை அடைந்துள்ளார்கள். இதனால் மண்டேலா படத்தைத் தடை செய்ய வேண்டும், யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினரும் விஜய் தொலைக்காட்சியும் எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். படத்துக்குத் தடை விதிக்கவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனக் கூறினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.