அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

நடிகர் யோகி பாபு மீது முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் புகார் (விடியோ)

பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும் குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று...

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 1:19 pm IST

நடிகர் யோகி பாபு மீது தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஷஷிகாந்த் இப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மண்டேலா படத்துக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

யோகி பாபு நடித்த மண்டேலா படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளன. எனவே இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், நடிகர் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் கூறியதாவது:

எங்கள் மருத்துவர் சமுதாய மக்கள் தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளார்கள். யோகி பாபு நடித்த மண்டேலா படம் மருத்துவர் சமுதாயத்தையும் முடி திருத்தும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தியுள்ளது. படம் முழுக்க முடி திருத்தும் தொழிலாளர்களை எந்தளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தியுள்ளார்கள். காரில் ஏற்றாமல் அலைக்கழிப்பதும் பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும் குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று கூறுவதும் என எங்களை நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனால் அனைவரும் மனவேதனை அடைந்துள்ளார்கள். இதனால் மண்டேலா படத்தைத் தடை செய்ய வேண்டும், யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினரும் விஜய் தொலைக்காட்சியும் எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். படத்துக்குத் தடை விதிக்கவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனக் கூறினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.