''வெட்கப்பட்டேன்'' : சூர்யா பகிர்ந்த சுவாரசியத் தகவல்
எதற்கும் துணிந்தவன் பாடல் அனுபவம் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தள்ளார்.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இருந்து டி.இமான் இசையில் வாடா தம்பி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து உள்ளம் உருகுதய்யா என்ற பாடல் வெளியானது. யுகபாரதி எழுதிய இந்தப் பாடலை பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாசன், பிருந்தா மாணிக்கவாசன் உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர்.
இதையும் படிக்க | சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
இந்த பாடலில் நடிகர் சூர்யா மீசையில்லாமல் தோன்றியிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப் பாடலை பகிர்ந்த சூர்யா, நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் வெட்கப்பட்ட பாடல்.. இயக்குநரே... என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...